திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்கள் நெருங்கிக் கொண்டு இருப்பதால் பல்வேறு இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஆயத்தமாகி வருகிறார்கள். அதற்காக திண்டுக்கல் அருகே உள்ள நொச்சி ஒனடப்பட்டியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.