சிறுகரம்பலூரில் 108 பால்குட ஊர்வலம்

வேப்பூர் அடுத்துள்ள சிறுகரும்பூர் கிராமத்தில் மாரியம்மன் மற்றும் மதுரை வீரன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் அம்மனுக்கு காப்பு கட்டி திருவிழா நடைபெறும். அதன்படி ஆடி மாத திரு விழாவுக்கான காப்பு கட்டுதல் நிகழ்ச்சி கடந்த 12ம் தேதி நடைபெற்று தினந்தோறும் மகாபாரதம் நிகழ்ச்சி நடைபெற்றன. விழா நிறைவு நாளான வியாழக்கிழமை பக்தர்கள் அருகில் உள்ள நீர்நிலைகளில் இருந்து பால்குடம் எடுத்து அக்னிசட்டி ஏந்தி முளைப்பாரி எடுத்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். கோயில் வளாகத்தை சுற்றி வந்த பக்தர்கள் பின்னர் 108 பால் குடங்களில் இருந்த பாலினால் அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் தொடர்ந்து பக்தர்களுக்கு கூழ் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.


Previous Post Next Post