கோபிசெட்டிபாளையம் குண்டேரிப்பள்ளம் அணையிலிருந்து விவசாயத்திற்கு முதல்கட்ட தண்ணீர் திறப்பு




கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையிலிருந்து தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் வலது மற்றும் இடது கரை பாசன வாய்க்கால்களுக்கு முதல்கட்ட தண்ணீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் திறந்துவைத்து மலர் தூவி வணங்கினர். இதனால் 2498 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணை டி.என்.பாளையம் வனசரக்கத்துக்குட்பட்ட அடர்ந்த வனப்பகுயில் அமைந்துள்ளது. 42 அடி கொள்ளவு கொண்ட அணையில் தற்போது 28 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான குன்றி மல்லியம்மன்துர்கம் விளாங்கோம்பை கம்மனூர் உள்ளிட்ட வனப்பகுதிகளில் போதிய மழை இல்லாததினால் அணைக்கு நீர் வரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. 

இந்த அணையை அதிகளவு வனவிலங்குகள் குடிநீர் ஆரதாரமாக கொண்டுள்ளது. இதனால் அணையின் நீர் இருப்பு வனவிலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்திசெய்யும் அளவு மட்டுமே உள்ள நிலையில் அணை பாசன விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கவேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கைவைத்திருந்தனர். அதனால் விவசாயிகளின் நலன் கருத்தி தமிழக முதல்வர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசாணை பிரப்பித்தார். அதன் அடிப்படையில் குண்டேரிப்பள்ளம் அணையிலிருந்து வலது மற்றும் இடது கரை பாசன வாய்க்கால்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீர் திறந்துவைத்து மலர்தூவி வணங்கினர்.  இதனால் கொங்கர்பாளையம் வினோபாநகர் மோதூர் வாணிப்புத்தூர் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 2498 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் நீர் இருப்பை கருத்தில் கொண்டும் வனவிலங்களின் தண்ணீர் தேவையை மனதில் கொண்டும்அணையிலிருந்து முதற்கட்டமாக 10 நாட்களுக்கும் அணைக்கு தண்ணீர் வரும் பட்சத்தில் தொடந்து தண்ணீர் வழங்கப்படும் என்றும் பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

 




 

Previous Post Next Post