சிறுகரம்பலூர் மாரியம்மன் கோவிலில் ஆடி மாத விழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்தினர். வேப்பூர் அடுத்த சிறுகிரம்பலூரில் மாரியம்மன் கோவில் திருவிழா 10 ஆம் தேதி துவங்கியது. கிராம மக்கள் பால்குடம், தீர்த்தக்குடம் அக்னிச்சட்டி, எடுத்து அலகு குத்தி முக்கிய தெரு வழியாக ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார ஆராதனை நடைபெற்றது. அதன் பிறகு விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை சிறுகரம்பலூர் கிராம இளைஞர்கள் செய்தனர்.