பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

   கொடிவேரி பாசனத்திற்கு உட்பட்ட தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு வருடந்தோறும் ஏப்ரல் 16 முதல் பிப்ரவரி 15 வரை 10 மாதங்களுக்கு இரு போக  நஞ்சை பாசனத்துக்கு நீர் திறந்து விடுவது வழக்கம்.2019 ஏப்ரல் 15 அன்று அணையின் நீர்மட்டம் குறைவாக இருந்த காரணத்தால் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு நீர் திறக்கப்படவில்லை. ஜூலை முதல் வாரத்தில் முதல் போக பாசனத்திற்கு நீர் திறக்க கோரிக்கை விடுத்தோம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்களும் பொதுப்பணித்துறையின் கலந்து ஆலோசித்து வருகிற வாரங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பவானிசாகர் அணைக்கு வரத்து அதிகரிக்கின்ற பொழுதும் அணையின் நீர்மட்டம் 10 டிஎம்சி க்கு மேலாக நீர் உயர்கின்ற பொழுது உங்களுடைய கோரிக்கையை பரிசீலனை செய்யப்பட்டு நீர் திறக்க ஆவணம் செய்யப்படும் என உறுதி அளித்தார்கள். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாகவே பருவமழை தீவிரமடைந்து அணைக்கு நீர்வரத்து சராசரியாக 15 ஆயிரம் கன அடியாகவும் அணையின் நீர்மட்டம் 10 டிஎம்சி மேலாகவும் உயர்ந்து வருகிறது எனவே உடனடியாக தடப்பள்ளி அரக்கன்கோட்டை முதல்போக நன்செய் பாசன ஆகஸ்ட் 12 முதல் 135 நாட்களுக்கு நீர் திறந்துவிட வேண்டும் என தடப்பள்ளி அரக்கன்கோட்டை பவானி நதி பாசன விவசாயிகள் சங்க தலைவர் சுபி.தளபதி அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Previous Post Next Post