சீர்காழியில் மூடப்பட்ட அம்மா குடிநீர் விற்பனை நிலையம்


நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா குடிநீர் விற்பனை நிலையம் கடந்த 3 மாதங்களாக இழுத்து மூடப்பட்டுள்ளது. சென்னையில்
இருந்து குடிநீர் பாட்டில்கள் வந்து அரசு போக்குவரத்து கழக மூலம் விற்பனை செய்யப்பட்டு வந்தது. சென்னையில் குடிநீர் பாட்டில்கள் தயாரிக்கப்படுவது நிறுத்தப்பட்டு எல்லா ஊர்களிலும் அம்மா குடிநீர் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. மிககுறைந்த
விலையில் ரூ10க்கு 1 லிட்டர் அம்மா குடிநீர் கிடைக்காததால் ரூ 20 கொடுத்து தனியார்
மினரல் வாட்டரை வாங்க வேண்டியுள்ளது. அம்மா குடிநீர் பாட்டிலை சென்னையில்
தயாரிக்காமல் அந்தந்த மாவட்டங்களில் தயாரிக்கலாம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒவ்வொரு திட்டமும் மூடப் பட்டு முடக்கப்பட்டு வருகிறது என்று பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.


Previous Post Next Post