வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை அடித்த மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு


வேப்பூர் அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 5 பவுன் நகை, அரை கிலோ வெள்ளி பொருட்கள், 25 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி  சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த நிராமணி கிராமத்தைச் சார்ந்தவர் ராஜ்தேவர் மனைவி தேவிகா (வயது 32) இவர் தனது மகனுடன் வசித்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு சுமார் 8 மணி அளவில் ஜாதகம் பார்க்க தனது மகன் அசோக் குமாருடன் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். இதை அறிந்த மர்ம நபர்கள் இவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று பீரோவில் இருந்த 5 பவுன் நகை, அரை கிலோ வெள்ளி பொருட்கள், 25 ஆயிரம் ரூபாய் பணத்தையும் திருடி சென்றுள்ளனர். தேவிகாவின் வீடு பின்பக்கம் திறந்திருப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் தேவிகா விற்கு இதுகுறித்து தகவல் அளித்தனர். பின்னர் தேவிகா சென்னையிலிருந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவின் லாக்கரும் உடைக்கப் பட்டு அதிலிருந்த 5 பவுன் நகை, அரை கிலோ வெள்ளி பொருட்கள், 25 ஆயிரம் ரூபாய் பணம் மேலும் பணம் சேமித்து வைத்திருந்த மூன்று உண்டியல்களும் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  இதுகுறித்து தேவிகா வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் வேப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு வழக்குப் பதிவு செய்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை தேடிவருகின்றனர்.


Previous Post Next Post