மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் 65வது பிறந்தநாள் விழா. 

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் 65வது பிறந்தநாள் விழா. 

 


 

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் 65வது பிறந்தநாள் மற்றும் 60ஆம் ஆண்டு கலை பயணத்தை முன்னிட்டு ஈரோடு வடகிழக்கு மாவட்டம் கோபி செட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி சார்பில் கொடியேற்றம், இரத்ததானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஈரோடு வடகிழக்கு மாவட்ட செயலாளர் ஜி.எல்.எம் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது 

 

முதற்கட்டமாக மாவட்ட தலைமை அலுவலகத்தில் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. இரத்த வகை மற்றும் இரத்தத்தில் சர்க்கரை அளவு கண்டறியும் முகாம் நடைபெற்றது. கோபி அரசு மருத்துவமனையில் இரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் ஜி.எல்.எம் சிவக்குமார் மற்றும் மய்யத்தினர்  இரத்த தானம் செய்தனர். கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்றம் நடைபெற்றது அப்பொழுது நலிந்த மக்களுக்கு வேட்டி சேலை வழங்கப்பட்டது.  குருமந்தூரில் பேருந்து கால அட்டவணை திறந்து வைக்கப்பட்டது

 

இந்நிகழ்ச்சியில்  கோபி மேற்கு தொகுதி பொறுப்பாளர் ஜி.சி.சிவக்குமார் கிழக்கு தொகுதி பொறுப்பாளர் என். கே .பிரகாஷ் வடக்கு தொகுதி பொறுப்பாளர் ஜி. ஆர். பி.கார்த்திகேயன், தெற்கு தொகுதி பொறுப்பாளர் சுதாசெல்வராஜ்   பகுதி பொறுப்பாளர்கள் கே.ஜி.சரவணன், ஜி.என். நவீன்குமார், வி.ஆர். பழனிச்சாமி, விஜயராஜ், ஏ.டி.பிரகாஷ் , இளைஞர் அணி பிரினியோ கணேஷ், நா.முத்துகுமார், வேலுச்சாமி, கிருஷ்ணன், தங்கராசு, கோபால், கிட்டான், பிட்டான், கார்த்தி, மணிகண்டன், முருகன், மணிமோகன், ராம், கருப்புசாமி, கனேஷ், தேவராஜ்,  சண்முகம், மயில்சாமி, கனேஷன்  வர்த்தக அணி  விஜய்சரவணன், ஜோதிஸ்வரன், மணிகண்டன், டி.எஸ்.முருகேசன், கீவர், ஆர்.மருதாசலம், குப்பன், சண்முகம், மூர்த்தி, பண்ணாரி, வேலுச்சாமி, கிருஷ்ணமூர்த்தி மகளிர் அணி என். கே.சக்தி, சாந்தாமணி, ஆனந்தி, அமுதா, ருக்குமணி, பிரமிளா  மற்றும் பலர் கலந்து கொண்டனர் .

Previous Post Next Post