பவானிசாகர் அணை கீழ்பவானி வாய்க்காலில் திடீர் உடைப்பு

பவானிசாகர் அணை கீழ்பவானி வாய்க்காலில் திடீர் உடைப்பு 100 அடிக்கு உடைப்பு ஏற்பட்டதால் பதற்றம் 50க்கும் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின கால்நடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன..

 



ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டிய நிலையில் கீழ்பவானி வாய்க்காலில் 2 ஆயிரத்து 600 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது இந்நிலையில் கீழ்பவானி வாய்க்கால் செல்லும் வழியில் மில் மேடு கிராமத்தில் வாய்க்காலின் கரை திடீரென இன்று மாலை 6 மணிக்கு இடிந்து விழுந்தது இதனால் தண்ணீர் கரைபுரண்டு சொல்லி தோட்டம் கிராமத்திற்குள் நுழைந்ததும் 20 அடி நீளத்திற்கு முதலில் இடிந்து விழுந்த வாய்க்கால் கரையான் அதே தண்ணீரின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் படிப்படியாக 100க்கு இடிந்து விழுந்தது இதனால் வாய்க்கால் நீர் வெள்ளமாக கரைபுரண்டு ஓடியது மில் மேடு மூழ்கி அடித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 


 

அங்கிருந்த மின்கம்பங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சாய்ந்து மொத்தம் ஐந்து மின்கம்பங்கள் சாய்ந்ததால் மேட்டில் இடிந்து கரையிலிருந்து வெள்ளமாய் வெளியேறிய தண்ணீரானது சொல்லி கேத்தம்பாளையம் மேட்டுக்கடை சுண்டக்கம்பாளையம் ஆகிய கிராமத்துக்குள் புகுந்தது மேற்கண்ட கிராமங்களில் திடீரென வெள்ளமாய் வந்து தண்ணீரை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர் தங்களது வீடுகள் தண்ணீரில் மூழ்கும் என அறிந்த பொதுமக்கள் உடனடியாக குழந்தைகளை அழைத்துக்கொண்டு மேடான பகுதிக்கு தஞ்சம் புகுந்தனர் தங்கள் கால்நடைகளை அழைத்துக்கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றனர் இருப்பினும் தண்ணீர் மூழ்கிய வீடுகளில் இருந்த பொருட்கள் அடித்துச் செல்லப்பட்டு விட்டதாகவும் இரண்டு சக்கர வாகனங்கள் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டு விட்டதாகவும் ஏராளமான ஆடுகள் அடித்துச் செல்லப்பட்டு விட்டதாகவும் பொதுமக்கள் கூறினர் கேடயம் அரசு பள்ளி சுற்றுச் சுவர் இடிந்து விழுந்துள்ளது தண்ணீர் சென்ற வழிகளில் உள்ள கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப் பட்டிருந்த நெல் வாழை கரும்பு குச்சிக்கிழங்கு ஆகிய பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகியது சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறையினர் பொதுப்பணித் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டனர் பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட இருந்த இரண்டாயிரத்து 200 கன அடி நீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது இருப்பினும் திறந்துவிடப்பட்ட தண்ணீர் வடிய இன்னும் ஐந்து மணி நேரத்திற்கும் மேல் ஆகும் என்பதால் மணல் மூட்டைகள் கொண்டு வரப்பட்ட நாளை காலை அணையின் கடைகளில் அடுக்கி வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர் கீரை உடைந்ததால் மாறி தண்ணீர் சென்றதால் இப்பகுதி கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Previous Post Next Post