தாளவாடி அருகே விவசாய தோட்டத்தில் புகுந்த 15 யானைகள் இருசக்கர வாகனத்தை நொருக்கியது

தாளவாடி அருகே விவசாய தோட்டத்தில் புகுந்த 15 யானைகள் இருசக்கர வாகனத்தை நொருக்கியது.



சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தாளவாடி, ஜீர்கள்ளி, தலமலை, ஆசனூர், கேர்மாளம்,  கடம்பூர், டி.என்.பாளையம், சத்தியமங்கலம், பவானிசாகர், விளாமூண்டி என 10 வனச்சரகங்கள் உள்ளன இந்த வனச்சரகத்தில் யானை ,புலி ,சிறுத்தை, மான் ,கரடி, செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன வனவிலங்குகள் உணவு தண்ணீர் தேடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது இந்நிலையில் ஜீர்கள்ளி வனச்சரகத்திக்கு உட்பட்ட மல்லன்குழி கிராமத்தில்  வனப்பகுதியில் இருந்து வந்த 15 காட்டு யானைகள் இன்று காலை 6 மணியளவில்  விவசாய தோட்டத்தில் புகுந்தது இதை கண்ட அப்பகுதி விவசாயிகள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர் சம்பவயிடத்திக்கு வந்த வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் பட்டாசு வெடித்து  யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்  ஆனால் குட்டியுடன் இருந்த யானைகள்  பொதுமக்களையும் வனத்து றையிரையும் துரத்தியது. அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மல்லன்குழி யை சேர்ந்த பாலு என்பவரை யானை தூரத்தியது இதில் அவர் யானையிடம் இருந்து தப்பிக்க வாகனத்தை கீழே போட்டு விட்டு புதர்மறைவில் பதுங்கி உயிர்தப்பினார் இதில் அவரது இரு சக்கரவாகனத்தை யானைகள் காலால் மிதித்து நாசம் செய்தது சுமார் 2 மணி நேர போரட்டத்திக்கு பிறகு யானைகள்  வனப்பகுதிகுள் விரட்டியடிக்கப்பட்டது யானைகள் விவசாய நிலத்தில் புகாதவாரு அகழி அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Previous Post Next Post