திருமூலர் கார்த்திகை  அசுபதி ஆராதனை பெருவிழா 

திருமூலர் கார்த்திகை  அசுபதி ஆராதனை பெருவிழா 



மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவை மற்றும் தமிழ்நாடு திருமூலர் திருமன்றம் நடத்தும் சித்தர்கள் ஜீவ சமாதி மாத வழிபாட்டின் நிகழ்வான திருமூலர் கார்த்திகை மாத அசுபதி ஆராதனை பெருவிழா திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான திருவாவடுதுறை  அருள்மிகு கோமுதீஸ்வரர் திருக்கோயிலில் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகாசந்நிதானம்  ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண  தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளாணை வண்ணம் நடைபெற்றது. திருவாவடுதுறை மகாலிங்க ஓதுவார் திருமந்திர விண்ணப்பத்தினண வாசித்தார். திருவாவடுதுறை ஸ்ரீமத் அம்பலவாண தம்பிரான் மற்றும் திருக்கோயில் கண்காணிப்பாளர் சண்முகம்  முன்னிலையில் திரு மூலர் ஜீவ சமாதியில் அபிஷேக ஆராதனைகள் மற்றும் அன்னம் பாலிப்பு நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவை சார்பில் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் டாக்டர் இராம சேயோன் செய்திருந்தார்.


Previous Post Next Post