சென்னிமலை வாய்க்கால் பாளையம் அருகே குடிசை எரிந்து முதியவர் பலி

சென்னிமலை வாய்க்கால் பாளையம் அருகே குடிசை எரிந்து முதியவர் பலி



சென்னிமலை வாய்க்கால் பாளையம் அருகே  சுமார் 70 வயது மதிக்கத் தக்க பெரியசாமி என்ற முதியவர் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு சில நாட்களுக்கு முன்பாக கை கால் செயல் இழந்துள்ளது. இந்நிலையில் திடீர் ஏற்பட்ட நெருப்பு வீடு முழுவதும் பரவியுள்ளது.  கை கால் செயலிழந்த நிலையில் தனியாக வசிப்பதால்  திடீர் ஏற்பட்ட நெருப்பால் உடல் முழுவதும் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்.  உடனடியாக அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் தண்ணீர் ஊற்றி நெருப்பை அணைத்தனர். இதையறிந்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளனர். 


Previous Post Next Post