குழந்தைகள் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு வீதி நாடகம், மனித சங்கிலி நிகழ்ச்சி

மனித உரிமை தினத்தை முன்னிட்டு குழந்தைகள் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு வீதி நாடகம், மனித சங்கிலி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது.



மனித உரிமை தினத்தை முன்னிட்டு சேவ் அமைப்பானது மாநகராட்சி அலுவலகம் முன்பு குழந்தைகள் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு வீதி நாடகம், மனித சங்கிலி நிகழ்வினை நடத்தினர். சேவ் நிறுவனத்தின் செயல் இயக்குநர் அ. வியாகுலமேரி விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று குழந்தை உரிமைகள் மற்றும் அவற்றை நடைமுறைப் படுத்துவதின் அவசியம் பற்றியும் மேலும் திருப்பூரில் வெளி மாநில குழந்தைகளின் கல்வி, மனநலம் பாதிக்கப் பட்ட குழந்தைகளின் கல்விக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.



அவர்களுக்கான சிறப்பு பள்ளி மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றார். தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குநர் திரு. விஜயகுமார் அவர்கள் இந்நிகழ்வில்  தலைமையேற்று பேசுகையில் குழந்தைகளுக்கு வாழ்விற்க்கான உரிமை, வளர்ச்சிக்கான உரிமை, பங்கேற்பிற்கான உரிமை மற்றும் பாதுகாப்பு உரிமை போன்றவற்றை உறுதி செய்வது சமுதாயத்தின் கடமையாகும், குழந்தை உரிமையும் மனித உரிமையே என்பதை வலியுறுத்தி பேசினார். 118 சிறப்புப் பள்ளிக் குழந்தைகள் கலந்து கொண்டு குழந்தை கல்வியின் அவசியம் பற்றிய விழிப் புணர்வு கலை நிகழ்ச்சியினை நடத்தினர். இந்நிகழ்வில் காவல் துறை அதிகாரிகள், சிறப்புப் பள்ளி ஆசிரியர்கள், மற்றும் சேவ் பணியாளர்கள் கலந்து கொண்டனர். 


Previous Post Next Post