3 கோடி லஞ்சம்: வருவாய் புலனாய்வுத் துறை (DRI) கூடுதல் நிர்வாக இயக்குநர் கைது

3 கோடி லஞ்சம்: வருவாய் புலனாய்வுத் துறை (DRI) கூடுதல் நிர்வாக இயக்குநர் கைது

 


 

3 கோடி லஞ்சம் கேட்ட விவகாரத்தில் வருவாய் புலனாய்வுத் துறை கூடுதல் நிர்வாக இயக்குநர் சந்திரசேகரை சிபிஐ கைது செய்துள்ளது.  நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வருமான வரி மற்றும் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தொடர்பான இடங்களில் மற்றும் வீடுகளில் சிபிஐ சோதனைநடத்தி வருகிறது. 

 

குறிப்பாக தில்லி, நொய்டா மற்றும் லூதியானா ஆகிய இடங்களில் இந்த  சோதனைகள் நடைபெற்று வந்தன. இந்த சோதனைகளின் முடிவில் லூதியானாவில் வருவாய் புலனாய்வுத் துறை கூடுதல் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி வந்த சந்திரசேகர் என்பவர் ஏற்றுமதியாளர் ஒருவரிடம் 3 கோடி லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது

 

இதனை உறுதிப்படுத்திய CBl, நிர்வாக இயக்குநர் சந்திரசேகருக்காக ரூ. 25 லஞ்சத்தை முன் பணமாக பெற இடைத்தரகர்களாக செயல்பட்ட சுங்க முகவர்கள் ராஜேஷ் தனா , அணுப் ஜோஷி ஆகியோரை CBl கைது செய்தது. விசாரணையின் போது அவர் அதை ஒப்புக் கொண்டதன் காரணமாக  வருவாய் புலனாய்வுத் துறை (DRI) கூடுதல் நிர்வாக இயக்குநர் சந்திரசேகரும் கைது செய்யப்பட்டுள்ளார், இது சுங்கத்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Previous Post Next Post