கலஷா பைன் ஆர்ட்ஸ்சின் தனித்துவமிக்க பிரத்யோக கைவினை தங்கநகை கண்காட்சி திருப்பூர் குமரன் ரோடு பவுன்சி ஹவுஸ்-ல் நடைபெற்றது.



மேலும் கரூரில் 21 ம் தேதி நடக்கிறது. இதில், தங்கம், வைரம், ஜடாவு, வெள்ளி மற்றும் சொகுசான நகைகள், அளவற்ற வகையில் அனைத்து டிசைன்களிலும் இடம் பெற்றுள்ளது.


.


கலஷா, இந்தியாவின் கலை, தொழில்நுட்பங்களைக் கொண்டு, தங்க, வைர மற்றும் பிளாட்டின நகைகளில் அலங்கரிக்கப்பட்டவை. கண்காட்சிக்கு என்றே பிரத்யோகமாக மிகத்திறமையாக வடிவைமக்கப்பட்ட, கலை நயமிக்க நகைகள் இடம் பெற்றுள்ளன. எவ்வித லாபநோக்கமும் இல்லாமல், நேர்த்தியான முறையில் இந்த கண்காட்சியை வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில் கலஷா இயக்குனர் அபிஷேக் சந்தா அமைத்துள்ளார்.


புதிய கருத்துரு கொண்ட இன மணமக்களுக்கான நகை சேகரிப்புகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. புதுமையான தங்க மற்றும் ஜடாவு நககைகள், இந்திய கலையின் வேரிலிருந்து உருவாக்கப்பட்டவை. கோயில் நகைகள், ஒவ்வொரு நாளுக்கும் புதுமையா நகைகள் மற்றும் விழாக்கால நகைகள் என, பெண்களுக்கே ஏற்ற வகையிலான நகை சேகரிப்புகள் இடம் பெற்றுள்ளன. இந்தியர்களின் மனதை தொடும் வகையில், பழமையும் கலாச்சாரமும் நிறைந்த புதுமையான நகைகள் இடம் பெற்றுள்ளன.


கண்காட்சி குறித்து அபிஷேக் சந்தா கூறுகையில், ‘‘தனித்துவமிக்க பாரம்பரிய மற்றும் பழமையான நகை கலெக்சன்கள், பார்வையாளர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக உள்ளன. எப்போதும் ராஜ கம்பீரத்தை தருவதாக இது அமையும். ஒவ்வொரு நகையும், போற்றி பாதுகாக்கும் வகையிலான டிசைன்களில் கலாச்சாரமும், பாரம்பரியமும் மிக்கதாக இருக்கும்.’’ என்றார்.


இந்த கலஷா பைன் ஆர்ட்ஸ்சின் தனித்துவமிக்க பரத்யோக கைவினை தங்கநகை கலெக்சன் கண்காட்சியை அபர்ணா சுங்கு நடத்துகிறார். கலஷா ஜூவல்லரில் மாபெரும் ராயல் பாரம்பரிய மற்றும் பழமையான நககைள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக கோயம்புத்தூர், விசிவி ஷிஷ { வித்யோதயா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, பார்க் கல்வி குழுமங்களின் தலைமை நிரிவாக அதிகாரி  அனுஷா ரவி, .பானுமதி சின்னசாமி மற்றும் பயனீர் ஸ்டீல்ஸ் அண்டு ஸ்டைலிங் நிர்வாக பங்குதாரர் . நந்தினி ஸ்ரீபிரகாஷ் ஆகியோர் இந்த பிரத்யோக கண்காட்சியில் பங்கேற்றனர்.