ஜெயலலிதா பிறந்தநாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட ஜெயலலிதா பேரவை முடிவு: இபிஎஸ்., ஓபிஎஸ்., க்கு பாராட்டு தீர்மானங்கள்!

 


ஈந்முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் விமரிசையாக கொண்டாட அதிமுக அம்மா பேரவை சார்பாக ஆலோசனைக்கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.


 அதிமுக அம்மா பேரவை மாநில செயலாளரும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆலோசனைக்கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கலந்துக்கொண்டு அம்மா பேரவை நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசணைகளை வழங்கினர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: தன்னுடைய பிறந்தநாளன்று யாரும் தன்னுடைய இல்லம் வர வேண்டாம் என்றும் ஏழை எளியோர் இல்லங்களை நாடி சென்று அவர்களுக்கு உதவிகள் செய்திட வேண்டும் என்றும் இந்தியாவில் எந்த தலைவரும் சிந்திக்காதவற்றை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சிந்தித்து அன்புக்கட்டளையாக விடுத்துள்ளார். அந்த வகையில் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ முகாம்கள், இரத்ததான முகாம்கள், மாணவர்களுக்கு கல்வி உபகரகணங்கள் வழங்குதல், போன்ற உதவிகளை மக்களுக்கு செய்ய வேண்டும். அதிமுகவில் எந்த அணிகளும் இல்லாத வகையில் அம்மா பேரவை  மக்களுக்கு உதவிகள் செய்வதில் முன்னோடியாக திகழ்கிறது.
இதை தொடர்ந்து  இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: தன்னுடைய வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக உழைத்து மக்களின் இதயத்தில் குடியிருந்தவர் ஜெயலலிதா. அவருடைய உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல் மக்களுக்காக உழைத்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. தன்னுடைய பிறந்தநாளின் போது ஏழைகளுக்கும், முடியாதவர்ககுக்கும், நோயாளிகளுக்கும் உதவிகள் செய்ய வேண்டும் என்றும் அதுவே தனக்கு செய்யும் நன்றிக்கடன் என்றும் மறைந்த முதல்வர் தெரிவித்துள்ளார். அதனால் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஏழை மக்களுக்கும்  அம்மா பேரவை நிர்வாகிகள் உதவிகள் செய்திட வேண்டும் .
முதியோர்களுக்கும், நோயாளிகளுக்கும், மாணவர்களுக்கும் அவரவர் வசதிகளுக்கு ஏற்ப உதவிகள் செய்திட வேண்டும். மேலும் அதிமுக அரசின் திட்டங்களை  மக்களுக்கு புரிய வைத்து அவற்றை மக்களிடம்  கொண்டு  செல்ல வேண்டும். அம்மா பேரவை அதிமுகவின் இதயம் போன்றது எனவே அனைத்து மக்களும் பாராட்டக்கூடிய அளவில் மறைந்த முதல்வரின் பிறந்தநாள் விழாவை பேரவை நிர்வாகிகள் கொண்டாட வேண்டும் .
ஆலோசனைக்கூட்டத்தின் இறுதியில் அம்மா பேரவை சார்பாக   10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விபரம் வருமாறு:
தீர்மானம் 1...


மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக கடைப்பிடித்திடுவோம். என்றும்


அன்னதானம், இரத்ததானம், கண் தானம், உடல் உறுப்பு தானம் செய்யவும், இளைஞர்களுக்கு விளையாட்டு போட்டி, பெண்களுக்கு கோலப்போட்டிகள், ஏழை எளிய மக்களுக்கு இலவச திருமணங்கள் நடத்திட தீர்மானம் நிறைவேற்றம்


 தீர்மானம் 2


அதிமுக வை கட்டிக்காத்து வரும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைபாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் அவைத்தலைவருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்.


 தீர்மானம் 3


சீன அதிபர்- பிரதமர் சந்திப்பு வெற்றிகரமான நடைப்பெற்றதற்கு உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்.


 தீர்மானம் 4


தமிழ்நாடு நாள் அறிவிக்கப்பட்டு சிறப்பாக கொண்டாடிய முதல்வர், துணை முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்.


 தீர்மானம் 5


முதலமைச்சர் சிறப்பு குறை தீர்ப்பு கூட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்துவதோடு, தமிழ்நாடு முழுவதும் கூடுதலாக 5 லட்சம் முதியோருக்கு உதவித் தொகை தரப்படவும், முதியோர் சொத்து மதிப்பு உச்ச வரம்பை 1 லட்சமாக உயர்த்தியதற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்.


 தீர்மானம் 6


பாசன திட்டங்களும், தண்ணீர் தேவையை நிறைவேற்ற பணிகளை மேற்கொண்ட முதல்வர் , துணை முதல்வர், அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்.


 தீர்மானம் 7


ஜல்லிக்கட்டை நடத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொண்ட முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்.


 தீர்மானம் 8


5 புதிய மாவட்டங்கள், 9 புதிய மருத்தவ கல்லூரிகள், சேலம் மாவட்டத்தில் கால் நடை பூங்கா, புதிய கல்லூரிகள், 1600 கோடி ரூபாயில் அத்திக்கடவு- அவினாசி திட்டம், தொழில் தொடக்கம், 1000 ரொக்கத்துடன் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கிய முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களுக்கு வாழ்த்து.


 தீர்மானம் 9


தொடர்ந்து பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் திமுக விற்கு தொடர்ச்சியாக தோல்வியையே பதிலாக அளித்து அதிமுக வை கட்டிக்காத்து வரும் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்தும்


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் சாதனைகளை தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்க்கும் வகையில் சாதனை விளக்க பொதும்கூட்டங்கள் நடத்தில் அயராது உழைக்க சூளுரை ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.



தீர்மானம் 10


விக்கிரவாண்டி,  நாங்குநேரி சட்டமன்ற இடைதேர்தலில் அதிமுக பெற்ற மக்கத்தான வெற்றி மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அயராது உழைத்து பெற்ற வெற்றிகளை போல எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற சோர்வின்றி உழைக்க வேண்டும்


என்பன போன்ற 10 தீர்மானங்கள் அதிமுக அம்மா பேரவை ஆலோசனைக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.


Previous Post Next Post