அல் உம்மா, ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பினரை கைது செய்து வருவதால் சப் இன்ஸ்பெக்டரை கொலை செய்தோம் - தீவிரவாதிகள் வாக்கு மூலம்

 


தங்களது இயக்கத்தினரை என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து கைது செய்து வருவதால், பழிவாங்கும் நடவடிக்கையாக எஸ் எஸ் ஐ வில்சனை சுட்டுக்கொன்றதாக கைதான இரு தீவிரவாதிகளும் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குமரி மாவட்டம் களியக்காவிளை எஸ் எஸ் ஐ வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக கர்நாடாகா மாநிலம் உடுப்பி ரயில் நிலையத்தில் தவுபீக், அப்துல் சமீம் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இன்று அதிகாலை 5.30 மணிக்கு களியக்காவிளை காவல் நிலையம் கொண்டு வரப்பட்டனர். எஸ்பி ஸ்ரீநாத் தலமையிலான தனிப்படையினர், கியூ பிரிவு மற்றும் தீவிரவாத தடுப்பு படையினர் ஆகியோர் விடிய விடிய விசாரித்தனர். அப்போது இருவரும் தமிழ்நாடு நேஷனல் லீக் இயக்கத்தைச்சேர்ந்தவர்கள் என்றும், ஐஎஸ் ஐஎஸ் இயக்கத்துடன் நேரடி தொடர்பு வைத்திருந்ததாக கூறியதாக சொல்லப்படுகிறது.மேலும் தங்களது இயக்கத்தினர் மற்றும் அல்உம்மா, ஐஎஸ்ஐஎஸ் போன்ற அமைப்புகளை சேர்ந்த பலரையும் தேசிய புலனாய்வு துறை கைது செய்து வருவதால், எஸ் எஸ் ஐ யை சுட்டுகொன்றோம் என்று கூறியுள்ளதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.விசாரணைக்குப்பின் இரு தீவிரவாதிகளும் தக்கலை காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டனர். நண்பகலில் அவர்களை நீதிபதி முன் ஆஜர் படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைக்க, போலீசார் திட்டமிட்டுள்ளனர். பின்னர் முறைப்படி காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


Previous Post Next Post