குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று கூறுவதுுு சிக்கலை ஏற்படுத்தும் - காங்கிரஸ்் முன்னாள் அமைச்சர் கபில் சிபல்


  குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று கூறுவதுுு சிக்கலை ஏற்படுத்தும் - காங்கிரஸ்் முன்னாள் அமைச்சர் கபில் சிபல்



குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த முடியாது என்று எந்தவொரு மாநிலமும் நிராகரிக்க முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கபில்சிபல் கூறியுள்ளாா


 


கேரள இலக்கிய விழாவில் பங்கேற்றுப் பேசிய அவர், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தைப் பின்பற்ற முடியாது என மாநில அரசு கூறுவது அரசியலமைப்புச் சட்டத்தின்படி கடினமான ஒன்று என்றார்.குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றவோ, திரும்பப் பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்தவோ செய்யலாம் என்றாலும், இதனை அமல்படுத்த முடியாது என்று கூறுவது அரசியலமைப்புச் சட்டத்தின்படி சிக்கலையும், கூடுதல் சிரமங்களையுமே ஏற்படுத்தும் என்றார்.குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கேரள சட்டப்பேரவையிலும், இந்த சட்டத்திற்கு எதிராக பஞ்சாப் சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


 பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் சிலவற்றில் குடியுரிமை திருத்தச் சட்டம் மட்டுமின்றி, தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் பதிவேடு ஆகியவற்றையும் எதிர்த்து வருகின்றன.


Previous Post Next Post