மது தான் பாலியல் அத்துமீறலுக்கு காரணம்: 'மீ டூ' புகாரில் சிக்கிய வைரமுத்து பேட்டி

பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட சமூக தீமைகளுக்கு காரணமான மதுவை முற்றாக ஒழிக்க வேண்டும் என கடந்த ஆண்டில் பாடகி சின்மயியால் பாலியல் புகாருக்கு ஆளான கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு கவிஞர் வைரமுத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது திருவள்ளுவரை வாழ்த்தி திருக்குறள் பாடப்பட்டது.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைரமுத்து, மது உடலுக்கு மட்டுமல்லாமல் உறவுகளுக்கும் கேடு விளைவிக்கிறது என்றார். மது விற்பனை மூலம் விபத்து, 30 ஆயிரம் கோடிக்கு மேல் அரசுக்கு வருமானம் வந்துள்ளது என்று கூறிய வைரமுத்து, இது தான் தமிழகத்திற்கு விஷம் என்று குறிப்பிட்டார்.


Previous Post Next Post