தமிழகத்தில் பெரிய கலவரம் ஏற்பட வாய்ப்பு... - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கன்னியாகுமரியில் சார்பு ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து பெரிய அளவில் தமிழகத்தில் கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது தமிழக உளவுத்துறை கண்காணித்து இதனை தடுக்க வேண்டும். இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் திண்டுக்கல்லில் பேட்டி 


திண்டுக்கல்லில் நடந்த இந்து முன்னணி நிர்வாகிகள் கூட்டத்தில் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கலந்து கொண்டு பேசினார் இதனை தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது,


கடந்த காலங்களிலே கோவை சிறை ஜெயிலர் பூபாலன், மதுரை சிறை வார்டன் ஜெயப்பிரகாஷ், கோவை  சப்-இன்ஸ்பெக்டர் முரளி மீது வெடிகுண்டு வீசப்பட்டது. புழல் சிறையில் ஜெயில் வார்டன் வெட்கப்பட்டரர். இப்படி பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டு தமிழ்நாட்டில் ஒரு பெரிய கலவரத்தை உருவாக்க  ஒரு  அமைப்பு பயிற்சி எடுத்து அதை செயல்படுத்தி வருகிறது . கன்னியாகுமரி சார்பதிவாளர் வில்சன் சுட்டு கொல்லப்பட்டது இதன் தொடர்ச்சியாகும். மத்திய புலனாய்வு அமைப்பு தமிழகத்தில்  சில பயங்கரவாதிகளை கைது செய்திருக்கிறார்கள். ஆனால்  தமிழகத்தில் இருக்கக்கூடிய உளவுத்துறை இன்னமும் விழித்துக் கொள்ளவில்லை. இந்த பயங்கரவாத சம்பவம் இன்னும் கலவரமாக மாறுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றது. கோவை, திருப்பூர், தேனி உள்ளிட்ட பகுதிகளில்  பங்களா தேசத்தை சேர்ந்த  முஸ்லிம் தீவிரவாதிகள் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றன என்ற ஒரு தகவல் தற்பொழுது  வந்து கொண்டிருக்கின்றது. ஒரு நூறு முஸ்லிம்கள் சேர்ந்தால் ஆயிரம்   நபர்களை துப்பாக்கியால் சுட முடியும். மக்கள் யாரும் தடுக்க முடியாது. அதனால் தமிழக உளவுத்துறை  எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  எப்பொழுது திமுக பலமாக இருக்கிறதோ அப்போதெல்லாம் இது போன்ற தீவிரவாத செயல்கள் தலைதூக்கும் இந்த முஸ்லிம்களை தூண்டி  விடுவதை கருணாநிதி முன்பு கருணாநிதி செய்து வந்தார்.  அந்த வேலையை இப்போது  ஸ்டாலின் செய்து வருகிறார். திருமாவளவன், திருமுருகன், காந்தி ,வைகோ, சீமான் இவர்கள் அனைவரும் ஒரே மன நிலையை கொண்டவர்கள்.   போலீசாரின் மனோபலத்தை குறைக்கவேண்டும் குறைக்க வேண்டும். அவர்களை விரக்தி அடைய அடைய செய்ய வேண்டும் என்று இந்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருக்கிறார்கள் அதற்கு இவர்கள் எல்லாம் இந்த நாத்திக பேசக்கூடிய நக்சலைட்டுகள் இவர்களை ஒரு தூண்டுகோலாய் இருக்கின்றார்கள் இதை சரியாக கவனிக்கவில்லை என்றால் தமிழ்நாட்டில் ஒரு பெரிய கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் தமிழக உளவுத்துறை கண்காணித்து முளையிலேயே கிள்ள வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு பேசினார்


Previous Post Next Post