இனி ஒரு ஆனியும் ...ங்க முடியாது: வானத்துக்கே லேசர் வேலி போட்ட்ட இஸ்ரேல்!!!

வானத்துக்கே வேலி போட்ட கதையாக, தனது வான் வெளியில் எதுவுமே நுழைந்து விட முடியாத படி புதிய பாதுகாப்பு அம்சத்தை அமைத்திருக்கிறது யூத நாடான இஸ்ரேல்.


இன்றைய அளவில், யூதர்கள், இல்லுமினாட்டிகள் என்ற வார்த்தைகளை கண்டு பலரும் அஞ்சி வருவது நிதர்சனம். அதில் இல்லுமினாட்டிகள் கண்ணுக்கு தெரியாத திரைமறைவு வேலைகளை செய்து உலகை ஆட்டிப்படைப்பவர்கள் என்று கூறப்பட்டால், யூதர்களோ நேரடியாக நின்று நாங்கள் தான் உலகில் உயர்ந்தவர்கள், அறிவு மிக்கவர்கள் என மார்தட்டுகிறார்கள்.


ஆம், யூத நாடான இஸ்ரேலில், குழந்தைகள் கருவில் இருக்கும் போதே அவர்களுக்கு பாடம் கற்றுத்தரப்படுகிறது; கருவில் இருக்கும் குழந்தைக்காக தாயின் வாழ்க்கை முறையையே மாற்றியமைப்பவர்கள் அவர்கள். இசை கேட்பது, உணவுப்பழக்க கட்டுப்பாடு என பெற இருக்கும் குழந்தைக்காக கருவுற்ற பெண்ணிடம் இருந்தே வாழ்க்கை பாடத்தை ஆரம்பிக்கிறார்கள். யூதர்களிடம் கற்றுக்கொள்ள எண்ணிலடங்கா விஷயங்கள் உண்டு.


அதை விட்டு விஷயத்துக்கு வருவோம். 


ஏற்கனவே வான் பாதுகாப்பில் சிறந்த நாடாக இருந்தது இஸ்ரேல் தான். எந்த ஏவுகணை குண்டும் உள்ளே நுழைந்து விடாதபடி கவசம் அமைத்து இருக்கிறார்கள். 


இன்னும் ஒரு படி மேலே போய் வானத்துக்கே லேசர் வேலி போட்டு இருக்கிறார்களாம்.


இஸ்ரேலிய பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி "நாம் வான் பாதுகாப்பின் புது யுகத்தில் நுழைந்துவிட்டோம், இனி எதிரியின் ஏவுகனைகளும் விமானமும் நுழையமுடியாதபடி பல அடுக்கு பாதுகாப்பு செய்துவிட்டோம்" என்கின்றது


ஆம் லேசர் கற்றையினை வலுபடுத்தி மிக வலுவான வான் வேலியினை அமைத்திருக்கின்றது இஸ்ரேல்.


இதன் மூலம் தனது நாட்டில் 3 அடுக்கு பாதுகாப்பு அரணை அமைத்திருக்கிறது. 


1000 ஏவுகனைகள் இஸ்ரேலை நோக்கி வீசப்பட்டால் அத்தணையும் முதல் அடுக்கே தடுத்து விடும்.   அதில் தப்பியவற்றை மூன்றாம் அடுக்கும் தடுக்கும். அதிலும் தப்பி வந்தால், 3 ம் அடுக்கில் சிக்கி தடுக்கப்பட்ட ஆக வேண்டும்.


இப்படி பிக் பாஸ் வீடு கணக்காக, ‘’ தாக்கவும்  முடியாது, தகர்க்கவும் முடியாது” என்று வான்வேலி அமைத்திருக்கிற்து அந்த நாடு. இந்த இரண்டாம் மூன்றாம் கட்ட தடுப்பு அரணை, தாவீது கவண் எனப்படும்  David Sling என்கின்றது இஸ்ரேல்.


ஆம் பழைய ஏற்பாட்டில் தாவீது தனது கவண் கல்லில் கோலியாத்தைக் கொன்றார், அதனால் அந்த பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. யூதர்களின் ஒப்பற்ற அரசன் தாவீது என்பதால் அவர் அடையாளத்தையே வைத்துவிட்டார்கள்.


அயர்ன் டோம், தாவீது கவண் 1 , தாவீது கவண் 2 என 3 அடுக்கு பாதுகாப்பில் நுழைகின்றது இஸ்ரேல். உலகத்திலேயே  அதி நவீன வான் பாதுகாப்பு இதுதான். அமெரிக்காவில் கூட இப்படி ஒரு பாதுகாப்பு அம்சம் கிடையாது.


ஏவுகணை, விமானம், ட்ரோன், ஈ, எறும்பு, புறா என எதுவும் அதன் வான எல்லைக்குள் நுழைய முடியாத படி லேசரில் வான் வேலி அமைத்திருக்கிறது இஸ்ரேல் என்னும்  யூத நாடு.


போங்க பாஸ், வானத்துக்கே வேலி போட்டுட்டாங்க.. இனி ’’வானத்துக்கு ஏது எல்லை’’ன்னு.,  பாட்டெல்லாம் பாட முடியாது. 


Previous Post Next Post