திருப்பூரில் சேவைப்பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்த மக்களின் கரகோஷம்

திருப்பூரில் மக்கள் ஊரடங்கை தொடர்ந்து, மருத்துவம் உள்ளிட்ட சேவைப்பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கைதட்டியும், பாத்திரங்களை தட்டியும் உற்சாகப்படுத்தினர். 



மக்கள் ஊரடங்கை தொடர்ந்து மருத்துவம் உள்ளிட்ட சேவைப்பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கைதட்ட பிரதமர் மோடி அழைப்பு விடுத்து இருந்தார். இதையடுத்து, திருப்பூர் பகுதியில் உள்ள பல்வேறு குடியிருப்புகளில் பொதுமக்கள் கைதட்டியும், பாத்திரங்களை தட்டியும் நன்றி தெரிவித்து உற்சாகப்படுத்தினர்.

திருப்பூர் வெள்ளியங்காடு, பழைய பஸ் நிலையம், காமாட்சியம்மன் கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களும் குழந்தைகளும் மாலை 5 மணியளவில் வீடுகளை விட்டு வெளியே வந்து கைகளை தட்டியும், சிறுவர் சிறுமிகள் பாத்திரங்களை தட்டியும் மருத்துவம் உள்ளிட்ட சேவைப்பணியாளர்களை உற்சாகப்படுத்தினர். இதனால் பல்வேறு பகுதிகளில் கைதட்டல் மற்றும் பாத்திரங்கள் தட்டும் சத்தங்கள் கேட்டது. 


Previous Post Next Post