பவானி அரசு மருத்துவ மனையில் தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படி இங்கு பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக பாதுகாப்பு உடல் கவச உடையை 200, செவிலியர்களுக்கு தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் அரசு மருத்துவர், மற்றும் செவிலியர்களுக்கு வழங்கினார் இதனை தொடர்ந்து சித்தா மருத்துவ மனைக்கு சென்று அங்கு ஆய்வு மேற்கொண்டார் அதன்பிறகு சித்தா மருத்துவர் கண்ணுசாமி அமைச்சர் அவர்களுக்கு கபசுர குடிநீர் மூலிகை பொடியை வழங்கினார்.நோய் தடுப்பு மற்றும் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இந்ந மூலிகை பொடி இதுவரைக்கும் கடந்த பத்து நாட்களில் 32,ஆயிரம் நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இந்நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கிருஷணராஜ் மாவட்ட துணை கண்காணிப்பாளர் சேகர் பவானி காவல்துறை ஆய்வாளர் தேவேந்திரன் முன்னால் நகரமன்ற துணைத் தலைவர் ராஜேந்திரன், சீனிவாசன் மருத்துவர் கோபாலகிருஷ்ணன் தலைமை செவிலியர் பானு உட்பட அநேகர் கலந்து கொண்டனர்.
Tags:
மாவட்ட செய்திகள்