மக்கள் நீதி மய்யம் சார்பில் 250 பேருக்கு பாதுகாப்பு உபகரணங்கள்: ஜி.எல்.எம்.சிவகுமார் தலைமையில் வழங்கப்பட்டது

மக்கள் நீதி மய்யம் ஈரோடு வடகிழக்கு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் பணி புரியும் துப்புரவு பணியாளர்கள் 250 பேருக்கு உண்டான முககவசம், கையுறை மற்றும் டெட்டால் சோப்பு ஆகியவற்றை நகராட்சி ஆணையாளர் திரு தாணுமூர்த்தி அவர்களிடம் மாவட்ட செயலாளர் ஜி.எல்.எம் சிவக்குமார் தலைமையில் மக்கள் நீதி மய்யத்தினர் வழங்கினர்.


இச்செயலை நகராட்சி ஆணையாளர் மற்றும் துப்புரவு பணியாளர்கள் வெகுவாகப் பாராட்டினார்கள்


இந்நிகழ்வில் கோபி நகர செயலாளர் ஜி சி சிவக்குமார் கோபி ஒன்றிய செயலாளர் என் கே பிரகாஷ் மாவட்ட மகளிர் அணி சுதா கோபி சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பு என் கே சக்தி சமூக ஊடகம் மற்றும் தகவல் தொழில் நுட்ப பிரிவு நா முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்


Previous Post Next Post