50 பேரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெயிட்டிங்: கலெக்டர் விஜயகார்த்திகேயன்

திருப்பூரின் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்னும் 50 பேருக்கும் மேலான பரிசோதனை முடிவுகள் வேண்டியுள்ளதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் பேட்டி.


திருப்பூரில் கடந்தவாரம் ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அதிக அளவில் கூட்டம் கூடியதை அடுத்து தன்னார்வலர்கள் குழு மற்றும் காவல்துறையினருடன் மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய நிலையில் இன்று இறைச்சி மற்றும் மீன் கடைகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்இறைச்சி மற்றும் மீன் கடைகளில் கூட்டம் கூடாதுவாறு சமூக ஆர்வலர்கள் மற்றும் காவல் துறையினரை கொண்டு ஒழுங்குபடுத்தும் பணி நடைபெற்று வருவதாகவும் , திருப்பூரில் இன்று வரை 1114 தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் , இதுவரை மூன்று பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்னும் 50 க்கும் மேற்பட்டோருக்கான பரிசோதனை முடிவுகள் வர வேண்டியதுள்ளது எனவும் பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை இருப்பினும் தங்களைத்தாங்களே பாதுகாத்து கொள்ள ஊரடங்கு முடியும்  வரை வீட்டில் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பேட்டியளித்தார்.


Previous Post Next Post