இந்தியாவில் முதல்முறையாக ராட்சத இயந்திரம் மூலம் கிருமிநாசினி தெளிப்பு பணி: அமைச்சர் செங்கோட்டையன் அசத்தல் ஐடியா

 


 


ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட கோபி நகராட்சியில் இராட்சத கிருமி நாசினி தெளிக்கும் பணியினை  தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன்  பார்வையிட்டார்.


வீடியோ இதோ: 




இந்த ராட்சத இயந்திரம் மூலம் கிருமி நாசினியை புகையாக தெளிக்கும் பணியானது தமிழகத்தில் முதன் முறையில்  கோபிசெட்டிபாளையம் பகுதியில் செயல் படுத்தபட்டுள்ளது. ஐந்து லட்சம் மதிப்பிலான 2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த இயந்திரம் 100அடி தூரத்திற்கு தெளிக்கும் திறன் கொண்டது.


இதில் கோட்டாட்சியர் ஜெயராமன், தாசில்தார் சிவசங்கர், நகராட்சி ஆணையாளர் தாணு மூர்த்தி, முன்னாள் சேர்மன் கந்தவேல் முருகன், சொசைட்டி தலைவர் காளியப்பன்,  மாவட்ட முன்னாள் மாணவரணி செயலாளர் பிரினியோ கணேஷ், முன்னாள் வைஸ் சேர்மன் செல்வராஜ், நகராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Previous Post Next Post