டி.என்.பாளையம், கணக்கம்பாளையம் ரேசன்கடைகளில் அந்தியூர் எம்.எல்.ஏ ராஜாகிருஷ்ணன் ஆய்வு

தமிழக அரசு  பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ள உதவித்தொகை மற்றும் விலையில்லா பொருட்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை அந்தியூர் சட்ட மன்ற உறுப்பினர் இ.எம்.ஆர்.ராஜாகிருஷ்ணன் கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம்,துறையம்பாளையம், டி.என்.பாளையம் ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட முழுநேர மற்றும் பகுதி நேர நியாயவிலை கடைகளை  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


அங்கு பணியாற்றும் ஊழியர்கள், ஊராட்சி தலைவர்கள்,கூட்டுறவு சொசைட்டி தலைவர்கள் ஆகியோர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக  வாணிபுத்தூர் பேரூராட்சி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டார். இதில்  யூனியன் கவுன்சிலர் ராதாஹரிபாஸ்கர்,வா ணிபுத்தூர்  பேரூராட்சி செயல் அலுவலர் சு. சதாசிவம், மேற்பார்வையாளர் சேகர், பேரூர் கழக செயலாளர் ரங்கநாதன், கொண்டையம் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் மரகதம்பாலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Previous Post Next Post