துப்புரவு பணியாளர்கள். பொதுமக்களுக்கு உணவுபொருட்கள்: முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ., வழங்கினார்கள்

திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக., சார்பில், திருப்பூர் பெரியார் காலனியில், கொரோனா ஊரடங்கு நிவாரணமாக, மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு  500 பேருக்கு அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களை திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார் ஆகியோர் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் உதவி ஆணையர் வாசுக்குமார், சுகாதார அலுவலர் முருகன், கட்சி நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், கருணாகரன், ஈஸ்வரன், பிரகாஷ், கோட்டா பாலு, ரங்கசாமி, திலகர் நகர் சுப்பு, சின்னசசாமி, உள்பட பலர் பங்கேற்றனர்.  



Previous Post Next Post