மூடநம்பிக்கைகளை வளர்க்கும் விதமாக பிரதமர் பேசுகிறார்: கார்த்தி சிதம்பரம்

மூடநம்பிக்கைகளை வளர்க்கும் விதமாக பிரதமர் மோடி பேசி வருவதாக மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.


கொரோனா அச்சத்தால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், ஏப்ரல் 5-ம் தேதி மின் விளக்கை அணைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டிருப்பது ஏமாற்றமளிப்பதாக சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார்.


புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இக்கட்டான இந்த காலகட்டத்தில் எவ்வளவு நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வது, மருத்துவர்களுக்கு எந்த மாதிரியான பாதுகாப்பு கொடுப்பது என்பதைப் பற்றி கூறாமல் மூடநம்பிக்கைகளை வளர்க்கும் விதமாக பிரதமர் பேசி வருவதாகவும், இதனை விஞ்ஞானிகள் கேட்டால் ஏமாற்றமடைவார்கள் என்றும் கூறினார்.


Previous Post Next Post