திருப்பூர் வடக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 3266 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணமாக அரிசிப்பைகள்

திருப்பூர் வடக்கு தொகுதியில் 3266 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணமாக அரிசிப்பைகள் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார் ஆகியோர் வழங்கினார்கள்.


தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


திருப்பூர் வடக்கு தொகுதிக்குட்பட்ட, திருப்பூர் மாநகராட்சி 4 வது வார்டு 7 வது வார்டுக்குட்ப் பட்ட பகுதிகளில்  அங்கேரிபாளையம், மகாவிஷ்னு நகர் உள்ளிட்ட  பகுதியில் 3266 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணமாக அரிசிப்பைகளை திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார் ஆகியோர் வழங்கினார்கள்.


தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


இந்நிகழ்ச்சியில் முன்னாள் மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், வளர்மதி கூட்டுறவு சங்க தலைவர் கருணாகரன், முன்னாள் கவுன்சிலர் பாலசுப்பிரமணியம், ஒன்றிய கவுன்சிலர் ஐஸ்வரியா மகராஜ் , சேது மாதவன், பாலாஜி உள்பட பலர் பங்கேற்றனர். 


Previous Post Next Post