500 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, ஆயில் உள்பட 11 பொருள்கள்; முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், எம்.எல்.ஏ கே.என்.விஜயகுமார் வழங்கினார்கள் 

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


திருப்பூர் மாநகர் மாவட்டம், திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பூர் மாநகராட்சி 1ஆவது வார்டு பகுதியில் கொரோனா நிவாரணமாக 500 குடும்பங்களுக்கு அரிசி பருப்பு ஆயில் உள்பட 11  பொருள்கள் அடங்கிய மளிகை தொகுப்பை திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம் எஸ் எம் ஆனந்தன், திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே என் விஜயகுமார் எம்.எல்.ஏ வழங்கினார்கள்.


தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


உடன் முன்னாள் மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன், பகுதி கழக செயலாளர் கருணாகரன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் திலகர் நகர் சுப்பு, கோட்டா பாலு உட்பட கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.


 


 


Previous Post Next Post