தமிழகத்தில் இன்று 798 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு 8 ஆயிரத்தை கடந்தது

தமிழகத்தில் கொரோனா பரவல் எண்ணிக்கை அதிகளவில் இருக்கிறது. இன்று ஒரே நாளில் 798 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் இதுவரை தமிழகத்தில் 8002 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.


இதில், இதுவரை 2051 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.


சென்னையில் மட்டும் இன்று 511 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4372 ஆக உள்ளது.


இதுவரை கொரோனாவால் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.


 


 


 


Previous Post Next Post