கொரோனா தொற்று ஏற்பட்ட பகுதிகளில் சுகாதார பணிகளை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன்




கொரோனா தொற்று ஏற்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சுகாதார பணிகளை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஆய்வு செய்தார்.

 

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி மற்றும் வேப்பூர் பகுதிகளுக்கு சென்னை கோயம் பேட்டிலிருந்து 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சொந்த கிராமங்களுக்கு வந்துள்ளனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டதையடுத்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

 

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

இதனையடுத்து அவர்களுடைய சொந்த கிராமங்களில் அதிகாரிகள் தடுப்பு அமைத்து முழுவீச்சில் சுகாதாரப் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனை கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், கழுதூர், தொண்டாங்குறிச்சி, கல்லூர், தொழுதூர் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தார். மேலும் அப்பகுதிகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

 

இதில் சார் ஆட்சியர் பிரவீண்குமார் தாசில்தார் செந்தில்வேல், ரவிச்சந்திரன்,காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன், எஸ்ஐ சக்திகணேஷ், பிடிஓ எஸ்.ஆர்.சங்கர், ஊராட்சிமன்ற தலைவர்கள் கருணாநிதி, பச்சையப்பன், செயலர் தேவேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.


 

 



 

Previous Post Next Post