என்னடா இது குடிமகன்களுக்கு வந்த சோதனை... குடையுடன் வந்தால் மட்டுமே 'சரக்கு' கிடைக்குமாம்

கொரானா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக மதுபான கடைகள் பூட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில் வரும் 7.5.2020 முதல் மதுபான கடைகள் மட்டும் சில கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படுகிறது.
நோய்க் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள மதுபான கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.
நோய்க் கட்டுப்பாட்டு பதிலுக்கு வெளியே உள்ள மதுபான கடைகள் மட்டும் கீழ்கண்ட நிபந்தனைக்கு உட்பட்டு திறக்கப்படுகிறது
1. மதுபான கடைகளில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும்.
2. ஒரு நபருக்கும் இன்னொரு நபருக்கு உள்ள இடைவெளி 6 அடி தூரம் வரை பராமரிக்கப்பட வேண்டும்.
3. மதுபான கடைகளில் ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் கூடுவதற்கு அனுமதிக்கக் கூடாது.
4. மதுபான கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.
5. அனைத்து மதுபான கடைகள் எதுவும் தேவைக்கு ஏற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
6. ஒவ்வொரு மதுபானக் கடைகளிலும் தேவைக்கு ஏற்ப கூடுதல் நபர்களை பணியமர்த்திய கூட்டம் சேர்வதை தவிர்க்க வேண்டும்.
7.சமூக இடைவெளியை தீவிரமாக கடைபிடிக்கும் பொருட்டு மதுபான கடைகளுக்கு வருபவர்கள் தவறாது குடையுடன் வந்து, குடை பிடித்து நின்று மதுபானங்களை பெற்றுச் செல்ல வேண்டும். குடையுடன் வராதவர்களுக்கு மதுபான வகைகள் வழங்கப்பட மாட்டாது.
8.மதுபான கடைகளில் பணியாற்றும் ஊழியர்களின் தனிநபர் சுத்தம் காணப்படுவதோடு மதுபானக்கடை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மேலும் பணியாற்றும் ஊழியர்கள் கண்டிப்பாக முகக் கவசம் மற்றும் கையுறை அணிந்து இருக்க வேண்டும்.


மேற்கண்ட நிபந்தனைக்கு உட்பட்டு மதுபான கடைகள் திறக்க அனுமதி அளித்து உத்தரவிடப்படுகிறது மதுபானக் கூடங்கள் திறக்க அனுமதி இல்லை மேற்கண்ட நபர் நிபந்தனைகள் மீறப்படும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
என்று திருப்பூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த அறிக்கையை அடுத்து திருப்பூர் மாவட்டத்திலுளள குடிமகன்கள் வீட்டில் உள்ள குறைகளை தேட ஆரம்பித்து உள்ளனர். பலபேர் ஓசியிலும் காசு கொடுத்தும் குடை வாங்கப் போவது மட்டும் உறுதி என தெரிகிறது. 


சமூக இடைவெளியை பின்பற்ற குடை கொண்டு வரச் சொல்லும் அறிவிப்பு வரவேற்பை பெறுகிறது.


Previous Post Next Post