கொரோனா தொற்று காரணமாக அறிவிக்க பட்டுள்ள ஊரடங்கு; வாழ்வாதாரத்தை இழந்து வாடும் நாடக மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் உள்ள நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் கொரோனா தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாக போதிய நிகழ்ச்சிகள் கிடைக்காததால் வருவாய் இல்லாமல் இருந்து வருகின்றனர். இதனால் நாடகக் கலைஞர்கள் குடும்பத்தினர் தற்போது உணவுக்கே கஷ்டப்பட்டு பசியில் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.




 


 

எனவே நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களையும் அவர்களின் குடும்பங்களையும் காக்கும் வகையில் தமிழக அரசு நிவாரணம்  வழங்க முன்வர வேண்டும். இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது பரவி வரும் கொரோனா நோயால் நாட்டுப்புற கலைஞர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

 

நத்தம் பகுதியில் உள்ள பெரும்பாலான நாடக மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு செய்யாமல் உள்ளார்கள் இவர்களுக்கு மாசி முதல்ஆடி மாசம் வரை  திருவிழா நடைபெறும் போதும் திருமணங்களில் போதும் வேலை வாய்ப்பு கிடைத்து வந்தது தற்போது கொரோனா தொற்று காரணமாக கூட்டம் கூட கூடாது என அரசு அறிவித்துள்ள நிலையில் இவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது . மேலும் இப்படி வறுமையில் வாடிக் கொண்டிருக்கும் தமிழகம் முழுவதும் உள்ள நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு இந்த ஊரடங்கு காலத்தில் வேலை இல்லை.

எனவே இவர்களுக்கு வாழ்வாதார இழப்பை ஈடு செய்யும் விதத்திலும் அவர்களுடைய குடும்பங்களுக்கு தமிழக அரசு குறைந்தது 3 மாதங்களாவது நிதி உதவி வழங்க வேண்டும்.

 


 

தமிழகத்தில்  நாடகம்  மற்றும்  நாட்டுப்புறக்  கலைஞர்கள்  சுமார்  2 லட்சம்  பேர்  வறுமையில்  வாடிக்  கொண்டிருக்கின்றனர்.  இவர்களின்  நாட்டுப்புற கலைஞர்கள்  நல  சங்கத்தில்  அரசு பதிவு  பெற்ற  45 ஆயிரம்  கலைஞர்கள் உள்ளனர்.  இவர்களுக்கு  வருடத்திற்கு  100 முதல் 120  நாட்கள் மட்டுமே  வேலை இருக்கும். நாடகக் கலைஞர்கள்,  தங்களை ராஜாவாகவும் வள்ளலாகவும் நாடகங்களில் நடித்து மக்களை மகிழ்வித்து,  மக்களிடம்  நல்ல  கருத்துக்களை  கொண்டு சேர்க்கிறோம்.  ஆனால்  இவர்களது  குடும்பங்கள்  அனைத்தும் வறுமையில் வாடிக் கொண்டிருக்கின்றனர். தற்போது  நாடக  கலைஞர்களின்  குடும்ப  வாழ்வாதாரம்  இன்று  மிகவும் மோசமான நிலையில் உள்ளது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.


 

 



Previous Post Next Post