பணகுடி பேருராட்சியில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் மூலம் 108 பயனாளிகளுக்கு  மானிய உதவி







 

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரூபாய் 2 லட்சத்து10 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது. இந்தத் தொகை நான்கு கட்டங்களாக வழங்கப்படுகிறது.

 

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதி பணகுடி பேரூராட்சியில் வசிக்கும் பயனாளிகளுக்கு குடிசை மாற்று வாரியத்தின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ்  18 வார்டுகளை சேர்ந்த 108 பேருக்கு உதவித்தொகைக்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி பணகுடி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

 

இந்நிகழ்ச்சிக்கு பணகுடி பேரூராட்சி செயல் அலுவலர் கிறிஸ்டோபர் தாஸ் தலைமை தாங்கினார்.

 

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை 108 பயனாளிகளுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வழங்கப்படும் உதவித் தொகைக்கான ஆணைகளை  வழங்கினார்.

 

இந்நிகழ்ச்சியில் வள்ளியூர் அதிமுக ஒன்றிய செயலாளர் அழகானந்தம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் உதவி நிர்வாக பொறியாளர் மாடசாமி,  உதவி பொறியாளர் ரீட்டா, பேரூராட்சி அதிமுக நிர்வாகிகள் பணகுடி ஜெகன், ஐயப்பன் கருப்பசாமி மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.


 






 



 



Previous Post Next Post