பழனி திமுக எம்எல்ஏ செந்தில்குமாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி





 

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி, கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களும் பாதிக்கப் பட்டுள்ளனர்.

 

அதனோடு, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்கள், அலுவலர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களும் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழனி திமுக எம்எல்ஏ செந்தில்குமாருக்கு மற்றும் அவரது மனைவிக்கும் கரோனா பாதிப்பு இருப்பது உறுது செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


 

 




Previous Post Next Post