அச்சன்புதூரில் தமுமுக சார்பில் சுதந்திர தின கொடியேற்றம்


தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் கிளையில் தமுமுக சார்பாக நாட்டின் 74 வது சுதந்திர தினத்தை போற்றும் வகையில் சுதந்திர தின கொடியேற்றப்பட்டது.

கிளை செயலாளர் ஜவ்ஹர் அலி தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர்
அகமது அலி ரஜாய் அவர்கள் தேசிய கொடியேற்றினார்.

இந்நிகழ்ச்சியில் மாநில ஊடகப்பிரிவு துணை செயலாளர்  ஆதம் காசியார், ஒன்றிய செயலாளர் திவான் ஒலி,  கிளை துணை தலைவர் செய்யது மசூது, பொருளாளர் பக்கீர் மைதீன்,  துணை செயலாளர் அக்பர் அலி, மனித உரிமை அணி செயலாளர்
நாகூர் மைதீன், சுற்றுச்சூழல் அணி செயலாளர் யஹ்யா சேக்,மருத்துவசேவை அணி செயலாளர் சாகுல் ஹமீது,செயற்குழு உறுப்பினர் ஜாபர் அலி, மாணவர் அணி (SMI) பொருளாளர் ரசூல் மைதீன் மற்றும் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
கொடியேற்றிய பிறகு பொதுமக்களுக்கு இனிப்புகள்  வழங்கப்பட்டது. இறுதியாக கிளை மாணவர் அணி(SMI) செயலாளர் சேக் செய்யது நன்றி கூறினார்.


Previous Post Next Post