திருவண்ணாமலையில் கட்டிட மேஸ்திரி கல்லால் அடித்து கொலை

திருவண்ணாமலையில் கட்டிட மேஸ்திரி கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருவண்ணாமலை அடுத்த தென்மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 40) . இவர் கட்டட மேஸ்திரியாக உள்ளார்.


அதேபகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம் வயது52). இவர்கள் இருவரும் பக்கத்து வீட்டில் வசித்து வருகின்றனர்.
பழனிவேல் கட்டிட வேலை முடித்து தனது வீட்டில் குளிக்கும்போது அந்த தண்ணீர் தர்மலிங்கம் வீட்டு வழியாக செல்வதால் இருவருக்கும் அடிக்கடி தகராறு வந்துள்ளது.


 இன்று மாலை பழனிவேல் தனது பணியை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். வழக்கம்போல்   குளிக்கும் போது கழிவு தண்ணீர் தர்மலிங்கம் வீட்டு வழியாக வந்ததால், தர்மலிங்கம் பழனிவேலிடம் தகராறு செய்துள்ளார்.



 அப்போது ஆத்திரமடைந்த தர்மலிங்கம், பழனிவேலுவை கீழே தள்ளி அவர்மேல் கல்லை போட்டு தாக்கியுள்ளார்.


இதில் காயமடைந்த பழனிவேல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செஎல்லப்பட்டார். பழனிவேலு உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள், பழனிவேலு ஏற்கனவே இறந்து விட்டதாக தெிவித்தனர்.


  இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தர்மலிங்கத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்​


 


Previous Post Next Post