சேலத்தில் முககவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் முககவசம் அணியாமல் அலட்சியமாக நடமாடிய பொதுமக்களுக்கு  அபராதம்


சேலம் மாவட்டம் அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தில் இருந்து மாநகராட்சி அதிகாரிகள் இன்று காலை முதல் அம்மாபேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பொன்னம்மாபேட்டை அம்மாபேட்டை தில்லைநகர் பட்டை கோவில் ஆகிய இடங்களில் முக கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் முககவசம் அணியாமல் அலட்சியமாக நடமாடிய பொதுமக்களுக்கு  அபராதம் விதிக்கப்பட்டு 200 ரூபாய் ‌வசூலிக்கப்பட்டது.


அதற்கான ரசீதுகளை பொதுமக்களிடம் வழங்கினார் ‌ மேலும் முக கவசம் அணிந்து ‌வர வேண்டும் கொரோனோ  நோய் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாக்க மற்றும் வெளியில் செல்லும் பொழுதும் வெளியில் இருந்து வீட்டுக்கு வரும்பொழுதும் தங்கள் கைகளை நன்றாக  சோப்பு அல்லது ஹேன் சேனிடைசர் கொண்டு கழுவிக்கண்டு செல்ல வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் வலியுறுத்தினார் 35 வது கோட்ட வரி வசூலிப்பவர் விஜயகுமார் பொதுமக்களுக்கு முககவசம் அணிவதன் அவசியத்தை விளக்கினார் 


Previous Post Next Post