இரண்டு ஆண்டுகளுக்கு முன் குழந்தையுடன் கணவரை தொலைத்த ஒரிசா பெண் - சேர்த்து வைத்த மாவட்ட ஆட்சியர்.!


தூத்துக்குடி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒரிசாவில் இருந்து 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருச்செந்தூருக்கு குழந்தையுடன் தனியாக வந்த பிளாச்சி என்பவரை அவரது கணவருடன் சேர்த்து ஒரிசாவிற்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், கலந்து கொண்டு பிளாச்சி மற்றும் அவரது பெண் குழந்தை அங்கிதா ஆகியோரை அவரது கணவர் உசோகொய் என்பவருடன் ஒரிசாவிற்கு அனுப்பி வைத்தார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருச்செந்தூரில் குழந்தையுடன் தனியாக வந்த கர்ப்பிணி பிளாச்சி என்பவர் சமூக நலத்துறை மூலம் கண்டறியப்பட்டு முடுக்குமீட்டான் பட்டி ஆக்டிவ் மைண்ட்ஸ் பெண்கள் காப்பகத்தில் வைக்கப்பட்டது. 

அவருக்கு கவுன்சிலிங் மூலம் மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அவருடைய பெண் குழந்தை அடைக்கலபுரம் சென்ட் ஜோசப் குழந்தைகள் காப்பகத்தில் வைக்கப்பட்டது. பிளாச்சி என்பவருக்கு முன் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. 

மனநல ஆலோசனைகள் மூலம் சுய நினைவு திரும்பிய அவர் தன்னுடைய மாநிலம் மற்றும் குழந்தைகள் குறித்து தெரிவித்தார். அதன் மூலம் அவரது சொந்த ஊர், சொந்த மாநிலம் தூத்துக்குடி மாவட்ட சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த சேவை மையத்தின் மூலம் பல்வேறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அவரது கணவர் உசோகொய் என்பதும், 

அவர் ஒரிசா மாநிலம் போலாங்கி மாவட்டத்தை சேர்ந்தவர் கண்டறியப்பட்டு ஒரிசா மாநில காவல் துறை உதவியுடன் இன்று பிளாச்சி மற்றும் குழந்தைகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், அவரது கணவரிடம் ஒரிசா காவல் துறையினரின் முன்னிலையில் ஒப்படைத்தார். 

அப்போது அந்த குடும்பத்தை சேர்த்து வைத்த மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் கேக் வெட்டப்பட்டது. மேலும் ஒருங்கிணைந்த சேவை மையத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தாடைகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், குழந்தைகளுக்கு வழங்கினார்

 நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.நேரு, மாவட்ட சமூக நல அலுவலர் தனலட்சுமி, ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி செளின் ஜார்ஜ், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பிரமநாயகம், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இளையராஜா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Previous Post Next Post