திருச்செந்தூர் கோயிலில் 8 நாட்களுக்கு பிறகு சாமி தரிசனத்திற்கு அனுமதி.!


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 8 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த 1-ந் தேதி முதல் நேற்று வரை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் கோயிலில் வழக்கமான பூஜைகள் நடைபெற்றன. இந்நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 8 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் பக்தர்களுக்கு சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். 

அதிகாலை 6 மணி முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளின் படி கடலில் புனித நீராடவும் நாழி கிணறு தீர்த்தத்தில் புனித நீராடவும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post