கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் தங்க நகைகள் வரை அடகு வைத்து கடன் பெற்றவர்களின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த மாதம் 13-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். 

அவற்றில், தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் தங்க நகைகள் வரை அடமானம் வைத்துள்ளவர்களுக்கான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.

Previous Post Next Post