கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு எஸ்.பி ஜெயக்குமார் வெகுமதி வழங்கி பாராட்டு.!


தூத்துக்குடி  மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய  5 காவல் ஆய்வாளர் உட்பட 32 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்ட எதிரிகளை கைது செய்து, அவர்களிடமிருந்து 31 பவுன் நகைகளை பறிமுதல் செய்த சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம், உதவி ஆய்வாளர் சங்கர், சிறப்பு உதவி ஆய்வாளர் பிராங்க் ஸ்டீபன், 

தலைமை காவலர் சுந்தர்ராஜ், முதல் நிலை காவலர்கள் கணேசன், பாலகுமார், தனிப்பிரிவு முதல் நிலை காவலர் கலைவாணர் மற்றும் காவலர்  மீனாட்சி சுந்தரம் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,

கடந்த 14.10.2021 அன்று முறப்பநாடு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக சாராய வடிப்பதற்காக வைத்திருந்த 50 பேரல்களை கைப்பற்றி அதில் இருந்த 19 லிட்டர் சாராயத்தை அழித்து சம்மந்தப்பட்ட 3 எதிரிகளை கைது செய்த 

முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன், உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் மோகன், முதல் நிலை காவலர் மாரிமுத்து, தனிப்பிரிவு காவலர் சேகர் மற்றும் காவலர் கணேஷ் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

குலசேகரபட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணி மற்றும் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்திய குலசேகரபட்டினம் காவல் நிலைய ஆய்வாளர்  மங்கையற்கரசி, உதவி ஆய்வாளர் வேல்முருகன், தலைமை காவலர் கோபாலகிருஷ்ணன், முதல் நிலை காவலர் ராமகிருஷ்ணன் மற்றும் காவலர் மோகன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

கடந்த 12.10.2021 அன்று ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரியை கைது செய்து, துரிதமாக செயல்பட்டு வழக்கு பதிவு செய்த அன்றே கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்பட்டுத்திய 

ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் முத்துராமன், உதவி ஆய்வாளர் முத்துராஜா, சிறப்பு உதவி ஆய்வாளர்  பொன்முனியசாமி, முதல் நிலை காவலர்கள் கொடிவேல்,  பிரபாகரன் மற்றும் காவலர்  விடுதலை பாரதிகண்ணன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

கன்னியாகுமரி மாவட்டம் காவல் அலுவலகத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற வான்செய்தியின்படி தூத்துக்குடி மாவட்ட காவல் கட்டுபாட்டு அறையிலிருந்த கொடுக்கப்பட்ட வான்செய்தி தகவலின் அடிப்படையில் கடந்த 10.10.2021 அன்று சவலாப்பேரி சோதனை சாவடியில் வாகன தணிக்ககையின் போது 

ஒரு காரை சோதனை செய்ததில் அதில் இருந்த ஒரு கட்சியின் நிர்வாகிகளை பிடித்து கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி காவல் நிலைய ஆய்வாளரிடம் ஒப்படைத்த புளியம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் தர்மர், 

மணியாச்சி முதல் நிலை காவலர் செந்தில்குமார், புளியம்பட்டி காவல் நிலைய காவலர்கள்  அந்தோணி பிரகாஷ், மகேந்திரராசு,  ஜெரோம் ஞானபிரபு, கோமதி சங்கர் மற்றும் செண்பகராஜா ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

5 காவல் ஆய்வாளர் உட்பட 32 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்வின் போது மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உடனிருந்தார்.

Previous Post Next Post