சேலத்தில் பாஜக ஓபிசி சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம்.!


சேலம் மாவட்டம் அயோத்தியபட்டினம் ஒன்றியம் மின்னாம்பள்ளி வைஷ்ணவி ஹாலில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி சேலம் கிழக்கு மாவட்ட ஓபிசி அணி மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

ஓபிசி அணி கிழக்கு மாவட்டத் தலைவர் அய்யனார் தலைமையில்,ஓபிசி அணி மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் ஓபிசி அணி சேலம் கோட்ட  பார்வையாளர் வழக்கறிஞர் சண்முகநாதன் முன்னிலையில் சேலம் கிழக்கு மாவட்ட ஓபிசி அணி பொதுச்செயலாளர் ரஞ்சித்குமார் தீர்மான நகலை வாசித்தார். 

ஓபிசி அணி அயோத்தியாபட்டினம் தெற்கு மண்டலத் தலைவர சந்திரன் வரவேற்புரையாற்றினார். ஓபிசி அணி மாவட்ட செயலாளர் காட்டூர் ரமேஷ் முன்மொழிய ஓபிசி அணி மாவட்ட துணைத்தலைவர் ஜெய் கௌரி வழிமொழிந்தார். 

இந்நிகழ்ச்சி சிறப்பு அழைப்பாளர்களாக தேசிய பொதுக்குழு உறுப்பினர் சேலம் கிழக்கு மாவட்ட பார்வையாளர் முருகேசன் , ஓபிசி அணி மாநில துணைத்தலைவர் கோவை பெருங் கோட்ட பொருப்பாளர் கலைச்செல்வன், ஓபிசி அணி மாநில பொதுச்செயலாளர் தஞ்சை பெருங் கோட்ட பொறுப்பாளர் சரவணன் ஓபிசி அணி சேலம் கிழக்கு மாவட்ட துணைத்தலைவர்கள் ரவி, சித்துராஜ், துரைசாமி, ராமர், ஓபிசி அணி மாவட்ட பொதுச் செயலாளர் வெங்கடேஷ், மாவட்டச் செயலாளர்கள் ஸ்ரீதர்,எஸ்.நாகராஜ், பழனிவேல்,ரமேஷ் ,மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மண்டல் தலைவர்கள், பொதுச் செயலாளர் பொருளாளர்,சேலம் கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சம்பத்குமார் நன்றி உரையாற்றினார்.

Previous Post Next Post