நெல்லையில் அதிமுக வினர் விருப்ப மனு தாக்கல்.

 



திருநெல்வேலி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் மனுக்களை அளிக்கும் நிகழ்ச்சி நெல்லை வண்ணார்பேட்டை லெட்சுமி காயத்ரி ஓட்டலில் இன்று நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினரிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்றார். 

இந்நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன், முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை, அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், முன்னாள் துணைமேயர் ஜெகநாதன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வள்ளியூர் அருண்குமார், எம்ஜிஆர் மன்ற செயலாளர் பெரிய பெருமாள், மாவட்ட துணை செயலாளர் பாலமுருகன் பகுதி செயலாளர்கள் வழக்கறிஞர் ஜெனி, மோகன், திருத்து சின்னதுரை, சண்முககுமார், முன்னாள் அரசு வழக்கறிஞர் அன்பு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post