தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராஜசேகர் (22), த/பெ. அந்தோணி ராஜ், தெற்கு காலனி, பாண்டவர்மங்கலம் என்பவர் 17 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார்.
இதன் காரணமாக கர்ப்பமடைந்த மேற்படி சிறுமிக்கு கடந்த 05.12.2021 அன்று குழந்தை பிறந்துள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய (பொறுப்பு) ஆய்வாளர் ராணி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜசேகரை கைது செய்தார்.