தடைசெய்யப்பட்ட கடல் அட்டை 2000 கிலோ கண்டுபிடிப்பு
இராமநாதபுரம் கடலோர பாதுகாப்பு குழுமம் ஆய்வாளர் கனகராஜ், சார்பு ஆய்வாளர்கள் கணேசமூர்த்தி யாசர் மவுலானா ஆகியோர் தலைமையில் வேதாளை கிராமத்தில் இந்திய அரசால் தடை செய்யப்பட்டு அவித்த கடல் அட்டை சுமார் 2000 கிலோ (2 டன்) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தப்பியோடிய குற்றவாளிகளை தேடி வருகிறார்கள். இதன் சர்வதேச மதிப்பு 1 கோடி ரூபாய் ஆகும். மேல்நடவடிக்கைகாக மண்டபம் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.