டாக்டர் அம்பேத்கர் 65 ஆம் ஆண்டு நினைவு நாள் -தமிழ்நாடு வஞ்சித் பகுஜன் காடி கட்சி மரியாதை.!*


டாக்டர் அம்பேத்கர் 65 ஆம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு ‌ தமிழ்நாடு வஞ்சித் பகுஜன் காடி கட்சி சார்பில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

இந்நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட தலைவர் வி.எம்.ஆர்.பாலு மேற்கு மாவட்ட தலைவர் வி.பழனிசாமி மாநிலத் துணைத் தலைவர் விஸ்வநாதன் முன்னிலை இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் என்.எம். மாதுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் சென்னையில் உள்ள குடிசை வாழ் மக்களை மாநகரை விட்டு வெளியேற்றும் திட்டத்தை தமிழக அரசும்,சென்னை மாநகராட்சியும் நிரந்தரமாக கைவிட வேண்டும். நெடுங் காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள பஞ்சமி நிலமீட்பு விவகாரத்தில் தமிழக அரசின் கால நிர்ணயம் தெரியப்படுத்த வேண்டுகிறோம். 

தமிழகம் முழுவதும் உள்ள எல்லா தனியார் பள்ளிகளிலும் இலவசக் கல்வி உரிமைச் சட்டம் கட்டாயமாகக் கடைப்பிடிக்க தமிழக கல்வித்துறை கவனமாக கவனிக்க வேண்டும்.கல்வி நிலையங்கள் அரசின் சமூக நூற்றங்கால் எனவே தமிழகத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலை பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் பல் மற்றும் மாணவிகளின் மாதவிடாய் சார்ந்த குறைபாடுகளை அவ்வப்போது மருத்துவப் பரிசோதனை செய்து பிள்ளைகளை கவனிக்க தமிழக அரசு திட்டம் சார்ந்த கொள்கையாக கடைபிடிக்க வேண்டும். 

சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறையில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக அரசு ஒப்பந்த அடிப்படையில் சுகாதாரப் பணியாளர்களை நியமித்து மிகச் சிறந்த முறையில் பணியாற்றி வருவது போல் தமிழகத்தில் உள்ள அனைத்து நகர மாநகரங்களில் தனியார் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்களையும் அரசு ஒப்பந்த அடிப்படையில் நியமித்து அந்தந்த பகுதி சுகாதார ஆய்வாளர் களின் கீழ் பணியாற்ற நியமிக்க வேண்டுகிறோம்.என‌ ஐந்து வகையான கோரிக்கைகளை வைத்தனர்.

Previous Post Next Post