தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மந்தித்தோப்பு மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவ முகாமை முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு முகாமை குத்து விளக்கு ஏத்தி துவக்கி வைத்தார்.
இம்முகாமில் நோயாளிகளுக்கு ரத்தப் பரிசோதனை ,சிறுநீரக பரிசோதனை, மற்றும் கண் நோய்களுக்கான சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டு முகாமுக்கு வந்திருந்த பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் உமா செல்வி,மாவட்ட ஊராட்சி குழு தலைவி சத்தியா,அதிமுக பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஊராட்சி ஒன்றிய துணைச் தலைவர் பழனிச்சாமி,மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் நீலகண்டன்,வார்டு உறுப்பினர் ராமர்,முன்னாள் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், மற்றும் செவிலியர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.